Sunday 20 January 2013

கவிதைகள் சொல்லவா - உள்ளம் கொள்ளை போகுதே


கவிதைகள் சொல்லவா ,
உன் பெயர் சொல்லவா ...
இரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...

ஓவியம் வரையவா ,
உன் கால் தடம் வரையவா ...
இரேண்டுமே ஒன்றுதான் ஓஹோ ...

யார் அந்த ரோஜபூ ,
கண்ணாடி நெஞ்சின் மேல் ,
கல்வீசி சென்றாள் அவள் யாரோ ...

உள்ளம் கொள்ளை போகுதே ,
உன்னை கண்ட நாள் முதல் ,
உள்ளம் கொள்ளை போகுதே , அன்பே என் அன்பே ...

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கும் என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே இல்லை என்னிடம் தான் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

கவிதைகள் சொல்லவா ....


காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

கவிதைகள் சொல்லவா

No comments:

Post a Comment