Monday 21 January 2013

உலகில் எந்தக்காதல் - நாடோடிகள்


உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம் கற்ப்பிக்கும் தப்பர்த்தம் 
(உலகில்..)

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெறும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இருகொள்ளி எறும்பானாள் 
பாசத்துக்காக காதலைத் தொலைத்து ஆலையில் கரும்பானாள் 
யார் காரணம்
யார் பாவம் யாரைச் சேரும்
யார்தான் செந்நிழல் கண்ணீர் வாழ்த்தா கண்ணீர் ஆனான்
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை

மனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே
விதை ஒன்றூப்போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
எந் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தாய்
கற்பைப்போலே நட்பைப் பார்த்தான்
காதல் தோற்கும் என்றாப்பார்த்தான்
(உலகில்..)

No comments:

Post a Comment