Sunday 6 October 2013

சில்லென்ற ஒரு - ராஜா ராணி

சில்லென்ற ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் நான் மாறினேன் பெண்ணே
ஒஹ் ஓஹ்ஹ் ஹோ ஹோ
ஒஹ் ஹோ ஹோ ஹோ
அட கருப்பட்டியே சீனி கழங்கே
சிரிச்சு கவுக்காதே
என் கண்ணுகுட்டியே கம்மா கரையில்
நீ கப்பல் ஒட்டாதே
காணலே பக்கமா கண்ணாலம் பண்ணலாமா?
கைகோர்த்து போலாமா
கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட
கோடைகால மழை வந்து போனபின்னும்
சாலை ஓரம் மரம தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே இரவோடு காயும் வெயிலே
உன்னாலே உன்னாலே நூல் இல்ல காற்றாடி ஆனேனே
அடி பெண்ணே அடி பெண்ணே
நான் விழுந்தால் உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளில் நான் மாறினேன் பெண்ணே
சில்லென்ற ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளில் நான் மாறினேன் பெண்ணே
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒரு முறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொல்லும் அழகே நிழல் கூட அழகின் நகலே
ஒருநாளும் குறையாத புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய் நெஞ்ஜோரம் வந்தாயே
அடி இடம் வலமாய் நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையில் என்னை தாக்கினாய் முன்னே..     


No comments:

Post a Comment