Sunday 6 October 2013

எவன் என்று நினைத்தாய் - விஸ்வரூபம்

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை

யேவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)

விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே
விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே

சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
(யாருக்கும்)

ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
(விஸ்வல்லா...ஹூ)

No comments:

Post a Comment