Thursday 31 October 2013

எதிர்த்து நில் - பிரியாணி

திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!


தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
விழித்தவன் தூங்கக்கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!


ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்!

No comments:

Post a Comment