Friday 2 May 2014

உன் விழிகளில் - மான் கராத்தே


உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறு எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறு எதுவும் வேண்டாமே பெண்ணே
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள் வந்தாயே
நான் தேடி தேடிதான் அலைஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்
நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே    
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே    
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே


No comments:

Post a Comment