Saturday 22 June 2013

கையில் மிதக்கும் - ரட்சகன்

கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...
(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
(உன்னை..)
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
(கையில்..)

No comments:

Post a Comment