Saturday, 22 June 2013

பிஸ்தா - நேரம்

ஹே சுரிக்க ரிக்கா
முக்கா முழம் போட்டே மரிக்கொழுந்து
கபத்தில மாட்டி புடிச்சு
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
ஹே சுரிக்க ரிக்கா
முக்கா முழம் போட்டே மரிக்கொழுந்து
கபத்தில மாட்டி புடிச்சு
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
டமாலேலேஹே  ஹே டமா டமா டமாலே
ஹே டமா டனக்கு டே டே
டஸ்கு டனக்கு டே டே
டண்டனக்கு டஸ்கு நக்கு டே டே
டே டே டே டே 
ஹே அரகிறுக்கிற முக்கா முழம் லோட்டே லாட்டி
மருன்னு கணக்கின வாட்டி எடுத்து   
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
ஹே சுரிக்க ரிக்கா
முக்கா முழம் போட்டே மரிக்கொழுந்து
கபத்தில மாட்டி புடிச்சு
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
டமாலேலேஹே  ஹே டமா டமா டமாலே
ஹே டமா டனக்கு டே டே
டஸ்கு டனக்கு டே டே
டண்டனக்கு டஸ்கு நக்கு டே டே
டே டே டே டே 



கனவிலே கனவிலே - நேபாளி

கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என் வாசமே என்னும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலை
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலை

காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே

இரவே பகலே இரவாய் தோன்றிடு
நிலவே நிலவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
(கனவிலே..)

உடை தொட்ட இடம் விரல் தொட்டுவிட உயிர் கெஞ்சுமே
அடைப்பட்ட நதி உடைப்பட்டுவிட அலை பொங்குமே
வேகம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் இமை நாங்கும் ஒளி சிந்துமே

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலைந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் மீண்டும் விரியுமே
கூட்டம் நடத்துமே பூக்கும் அழகிலே
(கனவிலே..)

கையில் மிதக்கும் - ரட்சகன்

கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...
(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
(உன்னை..)
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
(கையில்..)

மின்னல் ஒரு கோடி - காதலுக்கு மரியாதை

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
(மின்னல் ஒரு கோடி..)

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினாய் நான் மழையாகினேன்
நீ வாடினாய் என் உயிர் தேடினேன்

நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே

மழையில் நனையும் பனி மலராய் போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
(மின்னல் ஒரு கோடி..)

யாரோ இவன் - உதயம் NH4

பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

ஆண்:
உன் காதலில் அலைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

பெண்:
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

ஆண்:
எங்கே உன்னை கூட்டிசெல்ல
சொல்லாய் எந்தன் காதில் மெல்ல
பெண்:
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஆண்:
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
பெண்:
மெதுவாக இதயங்கள் நனைகிறதே
ஆண்:
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

பெண்:
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்:
உன் வாசனை வரும் வேலையில்
என் வாசனை ஏன் மாறுதோ
பெண்:
நதியினில் ஒரு இலை விழுகிறதே
ஆண்:
அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரைசேருமோ உன் கைசேருமோ எதிர்காலமே

பெண்:
எனக்காகவே பிறந்தான் இவன்
எனைக்காக்கவே வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன்
வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்