Monday 4 November 2013

ஒஹ் பெண்ணே - வணக்கம் சென்னை

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து
கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே...
ஐயோ தடுமாறுதே...

உன் கன்னம் மேலே
மழை நீரை போலே
முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you to see the morning light
Never leave your side

Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you to see the morning light
Never leave your side

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
உந்தன் அலை வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனை சேர ஒலி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே...
ஐயோ தடுமாறுதே...

உன் கண்ணம் மேலே
மழை நீரை போலே
முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை தந்தால் என்ன 

No comments:

Post a Comment