Wednesday 24 April 2013

காதல் எந்தன் காதல் - மூன்று பேர் மூன்று காதல்

காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசை ஏணி பாம்பு உள்ளே
பரமபதம்தான் வாழ்க்கையே

ஒருமுறை உந்தன் தோளில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கிப் போவேன்

விரல்களைக் கோர்த்து செல்லும்
வரம் கொடு போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே
செத்துப் போவேன்

விரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ?
வாசம் தருமோ
ஐயோ என்ன ஆகுமோ!

No comments:

Post a Comment