Wednesday 24 April 2013

ஆஹா காதல் - மூன்று பேர் மூன்று காதல்


ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையைத் தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா? எழுந்திடுவேனா?
எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா?
உனைப் பார்ப்பதை நானறியேன்
உன்னைப் பார்க்கிறேன் வேறறியேன்

என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா?
கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா?
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசையறியாது திரும்பிடுவேனா
காதல் பொன்னூஞ்சலில் அசைவது சுகம் சுகம்

No comments:

Post a Comment