Tuesday 26 February 2013

மன்றம் வந்த தென்றலுக்கு


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே….
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும்  மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
மேடையை போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வார்ண நிலாவும்
என்னோடு நீவந்தால் என்ன…. வா
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே ..என் அன்பே….

No comments:

Post a Comment