Saturday, 4 January 2014

பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உலகம்

பனங்கள்ளா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சம் எரியும்
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவே
மேகத்த கிழிச்சு எரியும்
(ஆ... பனங்கள்ளா)

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஹேய்...புரிஞ்சதா...

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூறு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
(பனங்கள்ளா)

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதாடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

யேலே யேலே யேலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா...
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுறது

கனிமொழியே - இரண்டாம் உலகம்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
 
நான் எட்டு..

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் போசும் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேற்கிறேன்

கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா


நான் எட்டு...

வானெங்கும் நீ மின்ன - என்றென்றும் புன்னகை

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன ....

பாலை ஒன்றை வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
நீ வாழ்வில் பசுமைகள் தந்தை
என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

வானெங்கும் நீ மின்ன ....

ஓ ஓ ப்ரியா ப்ரியா ....


என்னைச் சாய்த்தாளே - என்றென்றும் புன்னகை

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

ஒத்தையிலே உலகம் - என்றென்றும் புன்னகை

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசரி பிறந்தோமே
திசைகளாய் பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலயே
கண்ணீர் மறைக்கிறேன் முடியலயே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையிலே ....