Monday 8 March 2021

மறந்தாயே மறந்தாயே

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமா

தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்

யாரடி யாரடி
நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர்
காரணம் கூறடி

யாரடி யாரடி
பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம்
ஊறுதா பாரடி

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

முகிலுமில்லை புயலுமில்லை
மழைவருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதியுமில்லை உரமும்மில்லை
மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா

இது வரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா

ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்
நினைவென நிறைந்தாய்

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்

தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே

ஆஅ….…..சுரங்கத்தை போலே
என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே

உன்னை காண உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
உலகெல்லாம் பொய் இந்த
காதல் பொய் இல்லை

யாரடி
ஹா…..
யாரடி
ஹா…..
நான் இனி யாரடி
ஹா….
ஓர் துளி
ஹோ
ஞாபகம்
ஹோ
ஊறுதா பாரடி
ஹா….ஆஅ….

யாரடா யாரடா
நீ என்னுள் யாரடா
பேரலை போலே நீ
பாய்கிறாய் பாரடா

மறந்தாயே மறந்தாயே…..


No comments:

Post a Comment