Monday 9 December 2013

அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி

விழுந்தேனா? தொலைந்தேனா?
நிறையாமல் வழிந்தேனா?
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்,
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்.
காலில்லா ஆமை போலவே
காலம் ஓடுதே!
இங்கே உன் இன்மையை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே.
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே
இருதயம் துடிக்குதே!
அழைப்பாயா? அழைப்பாயா?
நொடியேனும் அழைப்பாயா?
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே…!
அழைப்பாயா?
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்என்ன நான் ஆகுவேன்?
மறக்கும் முன்னே
அழைத்தால்பிழைப்பேன்
அழைப்பாயா? அழைப்பாயா?
அலைபேசி அழைப்பாயா?
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே…!
அழைப்பாயா?


ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேறெதோநேருதே
அழைப்பாயா? அழைப்பாயா?
தவறாமல் அழைப்பாயா?
தவறாக அழைத்தாலே அது போதுமே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே!
அழைப்பாயா?


No comments:

Post a Comment