நான் போகிறேன்
மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின்
நீரை போலே
நீ சிந்தினாய்
எந்தன் மேலே
நான் பூக்கிறேன்
பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின்
ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
நான் போகிறேன்
மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின்
நீரை போலே
நீ சிந்தினாய்
எந்தன் மேலே
நான் பூக்கிறேன்
பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின்
ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால்
ஐயோ
உள்பக்கம் தாழ்பாள்
போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித்
தொட்டுப்
பார்த்தேன்
காற்றை ஐயோ
என் வீட்டில்
நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன்
வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அன்னாளும்
இன்று ,ஹானான்
என் தூக்கம் வேண்டும்
என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய்
என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
நான் போகிறேன்
மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின்
நீரை போலே
நீ சிந்தினாய்
எந்தன் மேலே
நான் பூக்கிறேன்
பன்னீர் பூ போலே
ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின்
ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
No comments:
Post a Comment