Monday 26 November 2012

மின்னலை பிடித்து - ஷாஜகான்


மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்
இப்படி இன்னொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணி தான்
பிரமனும் மூச்சை உற்றான்

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்
இப்படி இன்னொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணி தான்
பிரமனும் மூச்சை உற்றான்

அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும்போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஓ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும்பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்

நிலவின் ஒளியை பிடித்து பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்துவிட்டான்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்மை சமைத்துவிட்டான்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பால் டா
ஹே கவிதை என்பது மொழியின் வடிவம்,
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சலாய் நினைத்து கன்னதில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவி துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
ஆருக்கும் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களில் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஓஹோ தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட,
ஜனனம்  மரணம் ரெண்டும் தருபவளே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்

No comments:

Post a Comment