Friday 26 October 2012

எங்கே இருந்தாய்



எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான்
 காகிதத்தின் வெண்மையடி
 உன்னை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்த உடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி
என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றால்
விருட்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் பெயரை கேட்டாலே உன் பெயரைச் சொல்லுகிறேன்
எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று  குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் நுழைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டுவிட்டு சென்று
உந்தன் பின்னே வந்து உன்னை  தொடர்கிறதே
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான்
 காகிதத்தின் வெண்மையடி
 உன்னை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும்போது தாயும் நீயடி







No comments:

Post a Comment