Saturday, 27 July 2013

கனவெல்லாம் நீதானே

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் போது என்னை வதைகின்றதே

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே

சாரல் மழைத் துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
நாணம் நானறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எதுவரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே

தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே  
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் போது என்னை வதைகின்றதே

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே

   

Saturday, 22 June 2013

வரான் வரான் பூச்சாண்டி

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
[வரான் வரான்...]

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா
[வரான் வரான்...]

ஏழு கடல தாண்டி.....
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி......
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]

கொல்லிமலை தாண்டி.....
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி.....
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]

உன்ன நினைச்சேன் - அபூர்வ சகோதரர்கள்

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
(உன்ன நெனச்சேன்..)
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
(உன்னை நெனச்சு..)

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)

கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..

என் அன்பே - மௌனம் பேசியதே

என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரதத்தில் விளையாடுதே
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
(என் அன்பே..)

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இது தானோ காதல் என்றறிந்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்
அட கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுப்பக்கம் நீ காட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
(என் அன்பே..)
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி

என் இனிய பொன் நிலாவே

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே...
(என் இனிய..)