Sunday 5 January 2014

ஜில்லா ஜில்லா - ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா
வெப்பம் நீந்தும் தெப்பம் என
விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பார்வை பாயும் முள்ளா
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லா
துஞ்சா அஞ்சா நெஞ்சம்
அதன் பேர் தான் இங்கே ஜில்லா
தொட்டால் பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

இரு விழி அருகினால் எரிமலை வெடிக்கும்
நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும்
எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும்
இவனுடன் போர் இட யாருக்கும் உதறும்
குழி பறித்தவனது குருதியில் நனைப்பான்
குலம் கெடுப்பவனது குடல் உருவிடுவான்
வழி தடுத்தவனை சத கூறிடுவான்
வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்

ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்
போட்டி என்று வந்தால்
கை இடியாக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா 


வெரச போகையில - ஜில்லா

வெரச போகையிலே புதுசா போறவளே
இது வரையில குளிர் எடுக்கல பெண்ணால
அவ சிரிச்சததும் தல உறையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்க காணல

வெரச போகையிலே ....

இது நானா என்ன பழசெல்லாம் எங்க
புது சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது

எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கை மீறுது

வெரச போகையிலே புதுசா போறவளே

நல்லா கச்சிதமா என்ன பிச்சி சும்மா
தச்சி சேர்க்குறது உன் வேலையா
சுற்று வட்டாரத்தில் தந்த பட்டம் எல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா

நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போ நீ என் நெஞ்சின் மேல் கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரச போகையிலே ....

கண்டாங்கி கண்டாங்கி - ஜில்லா

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா ஒஹோ

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலைக் கோயில் யானை வந்து
அல்வாவை தின்பது போல்
என் ஆச உன்ன தின்னட்டுமே

ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நெத்திகுள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈரக்குலை நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற

நீ பார்த்தாக்கா தென்னமட்ட
பாஞ்சாக்கா தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற

அம்பு விட்டு ஆள அடிக்குற
தும்ப விட்டு வால பிடிக்குற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

கண்டாங்கி கண்டாங்கி

கண்டாலே கிறுகேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு

Saturday 4 January 2014

கண்ணும் கண்ணும் - வீரம்

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள்தானா
இவள்தானா

மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே
இவன் தானா
இவன் தானா

போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே ஓ
இவள்தானா
ஓ இவள்தானா

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே

தனியே
நீ வீதியிலே
நடந்தால்
அது பேரழகு
ஒரு பூ
கூர்த்த நூலாக
தெருவே
அங்கு தெரிகிறது

காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா
இவன் தானா

ல ல ல லா லே லா

குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்

அடடா
உன் கண் அசைவும்
அதிரா
உன் புன்னகையும்
உடலின்
என் உயிர் பிசையும்
உடலில்
ஒரு பேர் அசையும்

காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள்தானா
ஓ இவள்தானா

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நல்லவன்னு சொல்வாங்க - வீரம்

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க
எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க
சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும்
ஒரு சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும்
எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும்
அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்

ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஓஹோய் ஓஹோய்

ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்

ஹோய்..
மனம் மனம் மனம் வெள்ளை
கர கர கர இல்ல
எடுக்கா மடக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம்
எஸ்
பள பள பள வேஷ்டி
பளபளக்குற கோஷ்டி
ஓஹோ
உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம்
எங்க ஊரு வந்து பாருடா
அங்க டெண்டு கொட்டாய் ஜோருடா
யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஒஹோய் ஒஹோய்

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்

டேய்மாட்டுனீங்க இன்னைக்கு
ஐயோ
அண்ணன் துரத்துரார் ஓடுங்கடா
வேண்டாம்டா தம்பி
சொன்னா கேளு வேண்டாம்

பல பல பல கூட்டம்
பகல் இரவுகள் ஆட்டம்
வணங்கா பகலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம்
ஆமா
சிறு சிறு சிறு சேட்ட
ஒஹோ
விறு விறு விறு வெட்ட
ஒ..
பசியில் அதுவா அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்
அன்டர் வாலர் பசங்கடா
ஆனா கரந்த பாலு மனசுடா
காக்கா வெள்ளை
கொக்கு கருப்பு
நாங்க சொன்னா கேளுடா

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஒஹோய் ஒஹோய்

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்

பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உலகம்

பனங்கள்ளா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சம் எரியும்
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவே
மேகத்த கிழிச்சு எரியும்
(ஆ... பனங்கள்ளா)

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஹேய்...புரிஞ்சதா...

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூறு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
(பனங்கள்ளா)

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதாடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

யேலே யேலே யேலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா...
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுறது

கனிமொழியே - இரண்டாம் உலகம்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
 
நான் எட்டு..

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் போசும் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேற்கிறேன்

கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா


நான் எட்டு...