Wednesday 24 April 2013

விழியில் உன் விழியில் - கிரீடம்


விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீ தான் என்று நிழல் சொன்னதே...{2}

உன்னேடு வாழ்திடதானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன்  ...........

இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முரை இந்த இளமையின்
சுகம் உனக்கினி நான் துங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமை நீ வந்து கொடுத்தாய்..

{விழியில் உன் }

சிரிப்பிலே  உன் சிரிப்பிலே
சிறையடைக்கிறாய் நான் மீழவில்லை..........
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகின்றேன் என தெரியவில்லை..
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே....
உரையாடல் தொடர்ந்தாலும்
காலங்கள் கூட பிடிக்கிறதே..
என் கனவுக்கு கனவு நீ வந்து கொடுத்தாய்..........

{விழியில் உன் }

No comments:

Post a Comment