Tuesday 26 February 2013

யார் இந்த பெண்தான் - பாஸ் என்கிற பாஸ்கரன்


யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதிததை போல எப்போதும்
யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

மன்றம் வந்த தென்றலுக்கு


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே….
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும்  மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
மேடையை போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வார்ண நிலாவும்
என்னோடு நீவந்தால் என்ன…. வா
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே ..என் அன்பே….

மனசே மனசே - ஏப்ரல் மாதத்தில்


மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
(மனசே..)

மனசெல்லாம் - குளிர் 100*


Hey yo! This song is dedicated to everyone,
who miss their friend.. this is how, it feels

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே

கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

Homie..
Its been a while since we last met
cant forget what happened until my last breath
I regret my action coz what we had was everlasting
hey no joke man my heart comes crashing

எதுக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகள் அலைமோதி விழுகின்றதே
ஒலியாக இருந்தாய் கடைசியில் சிரித்தாய்
நன்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

Its all coming back...

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆனதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே..
என் பள்ளியே முற்றுப்புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உனை நினைத்தே தோழா

கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண்மூடினால் (I close my eyes) இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் நீ தானே வருகிறாய்

I am walking down memory lane it's all coming back
dont ever forget me man, that's all i ask
you got the control of my thoughts and emotion
when the world stops yo you put it back into motion

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
நண்பனாக நீயும் வந்தாய் சொல்லாமலே நீயும் சென்றாய்
நீ எங்கு போனாலும் உன் நினைவால் அழுகிறேன்
என் நண்பனே உனை இழக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே உனை இழக்கிறேன் என் நண்பனே

I didn't know the word friend had an end!

தாக்குதே கண் - பாணா காத்தாடி


தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதை தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில்லா பார்வையில் தான் வாய்க்கலாமோர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ
(தாக்குதே..)

பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி
பெட்டை மொழிதான் ஆண் மொழி கொட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வோர்க்கவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரீ
வங்கக்கடலின் ஓரத்தில் வெயில் தாழாத நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்
(தாக்குதே..)

செல்லில் தினமும் சேட்டிங் தான் காப்பி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆனா போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்க்கும் தான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும்பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்
(தாக்குதே..)

உன்னை காணாது - விஸ்வரூபம்


உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா



Friday 15 February 2013

மழைத்துளி மழைத்துளி - சங்கமம்


       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
       உடல் பொருள் ஆவியெல்லாம் 
   கலையில் சங்கமம் சங்கமம்
       (மழைத்துளி மழைத்துளி..)
       ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட 
   உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம 
   கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
       நீ உண்டு உண்டு என்றபோதும் 
   அட இல்லை இல்லை என்றபோதும்
       சபை ஆடிய பாதமய்யா 
   அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

       (மழைத்துளி மழைத்துளி...)


       தண்ணியில மீனழுதா கரைக்கொரு 
   தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே 
   எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ்ர் ஒவ்வொரு சொட்டும் 
   வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
        மனமே மனமே சபதம் 
   வெல்லும் மட்டும் சாயாதிரு
       விழியே விழியே இமையே 
   தீயும் போதும் கலங்காதிரு
       கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
       நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
       கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
       (மழைத்துளி மழைத்துளி...)
       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

       தந்தான தந்தானனா..
       மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
       உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
       நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
       இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
       ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
       தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
       புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
       போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
       மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
       கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
       ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்குச் சலங்கையிட்ட 
   உன் காலடிக்கு முதல்வணக்கம்
       என் கால் நடமாடுமையா நம்ம 
   கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
       நீ உண்டு உண்டு என்ற போதும்
       நீ உண்டு உண்டு என்ற போதும் 
   அட இல்லை இல்லை என்ற போதும்
       சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்
      மழைத்துளி மழைத்துளி...

யாரோ மனச - வேங்கை


யாரோ மனசு உலுக்க 
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க 
நீயோ மௌனமாக

ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக என்னாலும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்காக உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாய்வேன்
ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளுர கரைகிறதே

யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஓர் இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
உறவா நெனச்ச உள்ளம் இப்போ போராடுதே
ஒரே ஒரு வார்த்தை கேட்டு  நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலாய் என் மேலே அடிச்சிருச்சே
உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலென்னும் பேரைச் சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா
ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

சஹானா சாரல் - சிவாஜி


சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ (2)


சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
 என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ